Sunday 1 July 2012

பாரதி பிறந்தால்…

தன் நிறைவேறாக்
கனவை நிஜமாக்க…                                                               
இனியொரு ஜென்மம்
பாரதி பிறந்தால்…
நானும் பிறப்பேன்
அவன் அன்புத்தோழியாய்…

தவறுகண்டால்
பொங்கியெழுவேன்
நானும் அவனுடன்
இணைந்தே…

சேர்ந்து புறப்படுவோம்
துன்பம் தொலைத்த
புதுவுலகம் படைக்க…

அஞ்சா நெஞ்சுடன்…
யாருக்கும் அடங்காமலே
முன்னேறும்...நம்பாதை...
ரௌத்திரத்தால்
அநீதியை அடித்து
வீழ்த்தியபடியே…

----கீர்த்தனா----

4 comments:

  1. சேர்ந்து புறப்படுவோம்
    துன்பம் தொலைத்த
    புதுவுலகம் படைக்க… super akka.

    ReplyDelete
  2. துன்பம் தொலைத்து...
    புதுவுலகம் படைக்க..
    புறப்பட்டுச் செல்லும்..
    உன் கவிதைத் தேரில்..
    எழுதுகோல் பிடித்து..
    நீ பாரதியாய் வீற்றிருக்க!..
    அத் தேரின்..
    சாரதியாய் நானிருக்க..
    விரும்புகிறேன்!..

    ReplyDelete
  3. HAYYOO ANNAAAAAAA.....ROMMPA ROMMPA NANDRIKAL...ANNAN SAARATHI VERENNA VENDUM.. :))

    ReplyDelete