Tuesday 6 January 2015

சனி பகவான்...

அடுத்தடுத்து ஆயிரம் பிரச்சனை
விடுத்துக்கடக்க முடியவில்லை...
ஏழரைச்சனி பிடித்தாட்டுதாக்கும்
விரதம் பிடியென அம்மா சொன்னார்...

பிறந்தநாள் முதலாய்
என்மேற் காதல் கொண்டானோ
அன்புச் சனி பகவான்...

இத்தனை ஆண்டுகள்
சளைக்காமல் பின்னாலேயே
சுற்றிக் கொண்டே வருகிறானே...

பலதடவை உச்சத்தில் நின்று
உச்சபட்சக் காதல்...
உயிர்நின்று மூச்சுமுட்டி
மீண்டு வந்து மீண்டு வந்து...

விட்டுவிடு தலைவா...
முக்கால் கடந்துவிட்டேன்
காலையாவது
நிம்மதியாய் வாழ்ந்து போகிறேன்...

கீர்த்தனா

3 comments: